சிலாங்கூர் இவ்வாண்டின் முதல் கால் பகுதியில் RM76 கோடி வரிகளை வசூலித்து,
ஷா ஆலம், ஏப்ரல் 8: இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்தம் RM76 கோடி வரி வருவாய் மாநில அரசால் வசூலிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் பொழுது இது RM10 கோடியாக அதிக வசூலைப் பெற்றுள்ளதைக் காட்டுவதாகக் கூறினார்.
இங்குள்ள ஜூப்பிலி பேராக் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ரமலான் ரஹ்மாத் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.