ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றச் சிறார்கள் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்வு

கோலாலம்பூர், மே 22- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 499 பேர் அல்லது 31.3 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 47.1 விழுக்காட்டுச் சிறார்கள் அல்லது 16 லட்சத்து 71 ஆயிரத்து 928  பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது..

நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரத்து 909 பேர் அல்லது 68.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 72 ஆயிரத்து 623 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 98.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 575 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பன்னிரண்டு முதல் 17 வயது வரையிலான இளையோரில் 93.5 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 9 ஆயிரத்து 039 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும், 96.6 விழுக்காட்டினர் அல்லது 30 லட்சத்து 5 ஆயிரத்து 679 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் 20,860 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 7,296  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 12,179 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 1,385 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 7 லட்சத்து 84 ஆயிரத்து 541 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 3 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :