ECONOMYSELANGORSUKANKINI

சூப்பர் லீக் கால்பந்து போட்டி- ஸ்ரீ பகாங் குழுவிடம் சிலாங்கூர் எப்.சி. தோல்வி

ஷா ஆலம், ஜூலை 28– குவாந்தான், டாருள் மாக்மோர் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 2022 சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் எஃ.ப்.சி. அணி ஸ்ரீ பகாங் எஃப்.சி அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

ஆட்டத்தின் முதல் பாதியில் போடப்பட்ட அவ்விரு கோல்களின் வழி தோக் காஜா என அழைக்கப்படும் பகாங் குழு மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற்றுள்ளது.

ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களை ரெட் ஜெயண்ட் என அழைக்கப்படும் சிலாங்கூர் எஃப்.சி. குழு தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு ஸ்ரீ பகாங் குழுவுக்கு கடும் சவாலாகவும் விளங்கியது.

இரண்டு கோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்த போதிலும் சிலாங்கூர் குழு இடை விடாது தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணமிருந்தது, எனினும், கோலடிக்கும் அதன் முயற்சி வெற்றி பெறவில்லை.


Pengarang :