கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – இன்று காலை 7.27 மணியளவில் சபாவில் உள்ள குண்டசாங்கை ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
ரானாவ், சபாவின் வடமேற்கே 13 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டசாங் மற்றும் ரானாவைச் சுற்றி நடுக்கம் உணரப்பட்டது. மேலும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.