ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

2022 சுக்மா போட்டியை மாமன்னர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்

கோலாலம்பூர், ஆக 31 - வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கவிருக்கும்  20வது மலேசியா விளையாட்டுப் போட்டியை (சுக்மா)  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடீன் அல்-முஸ்தபா பில்லா ஷா  ஒப்புதல் அளித்துள்ளார்.

நேற்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற அழைப்பிதழ்  வழங்கும் நிகழ்வின்போது அல்-சுல்தான் இந்த ஒப்புதலை வழங்கியதாக  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு மன்றத்தின் (என்.எஸ்.சி) ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 16 முதல் 24 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த போட்டி விளையாட்டு குறித்து  மாமன்னருக்கு  விளக்கம் அளிக்கப்பட்டதாக  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 31 விளையாட்டுகளை உள்ளடக்கிய இப்போட்டி கிள்ளான் பள்ளத்தாக்கு,  நெகிரி செம்பிலான் மற்றும் லங்காவி ஆகிய  இடங்களில் நடைபெறும்

Pengarang :