ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த வாரம் 3.2 விழுக்காடு குறைந்தது

கோலாலம்பூர், செப் 19- கடந்த செப்டம்பர் 11 முதல் 17ஆம் தேதி வரையிலான 37வது தொற்றுநோய் வாரத்தில் மொத்தம் 13,627 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 14,072 சம்பவங்களாக இருந்ததாக  சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த வாரம் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.2 சதவீதம் குறைந்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.

கடந்த 37வது நோய்த் தொற்று வாரத்தில் தீவிர பாதிப்பை எதிர் நோக்கியவர்களின் எண்ணிக்கை  சராசரி 26,378 ஆகும். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் குறைவு என்றார் அவர்.

நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து இன்று இங்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 37வது நோய்த் தொற்று வாரத்தில் நோய்த் தொற்றினால் 31 பேர் இறந்த வேளையில் அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 34 ஆக இருந்ததாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் 16 விழுக்காடு குறைந்து 14,513 ஆக ஆகியுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 17,286 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :