ECONOMYSELANGORTOURISM

மீண்டும் பழ பருவம், உள்நாட்டுப் பழங்களை ருசிக்க சிலாங்கூர் ஃபுரூட் வெளி அழைக்கிறது 

ஷா ஆலம், 4 அக்: இந்த மாதம் டிசம்பர் வரை பழ பருவ காலம் என்பதால் , பல்வேறு உள்ளூர் பழங்களை ருசிக்க பொதுமக்கள் சிலாங்கூர் ஃபுரூட் வெளிக்கு அழைக்கப் படுகிறார்கள்.

டுரியான், புளாசன், கொய்யா, பலா, செம்படாக், ரம்புத்தான், அன்னாசி உள்ளிட்ட பழங்கள் வழங்கப்படும் என்று வேளாண் சுற்றுலா மையம் பேஸ்புக் மூலம் அறிவித்தது.

“அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு சிலாங்கூர் ஃபுரூட் வெளியில் பழங்கள் மீண்டும் காய்த்துள்ளன.

“வாருங்கள், இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நாங்கள் சிலாங்கூர் ஃபுரூட் வெளிக்கு உங்களை வரவேற்கிறோம்” என்று அவர் கூறினார்.

பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள சிலாங்கூர் ஃபுரூட் வெளி ஒவ்வொரு சனி முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

மேலும் தகவல் வேண்டுவோர் 012-3432971 அல்லது 016-6880792 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

முன்னதாக, இந்த அக்டோபரில் தொடங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சமீபத்திய நுழைவு டிக்கெட் விலையானது குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு RM15 என்றும், பெரியவர்களுக்கு RM20 என்றும் சிலாங்கூர் ஃபுரூட் வெளி அறிவித்தது.

சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு டிக்கெட்டுகள் RM30 ஆகவும், பெரியவர்கள் RM35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Pengarang :