ஷா ஆலம், நவ. 18: சிப்பாங் நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு மையமாக குறிப்பிடப்பட்டிருந்த டிங்கிள் தமிழ்ப் பள்ளி வாக்கு சாவடியை சமயத் தொடக்கப்பள்ளிக்கு (எஸ்ஆர்ஏ) தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
வாக்குப்பதிவின் அசல் இடமான தமிழ் தேசிய வகை தமிழ்ப்பள்ளி (எஸ்.ஜே.கே.சி) டிங்கிள் நேற்று திடீர் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“தேர்தல் ஆணைய அதிகாரிகள் அப் பள்ளிக்கு வருகை புரிந்து சோதனை மேற்கொண்ட பின் இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறியது