உலு லங்காட், நவம்பர்.18 – உலு லங்காட்டில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் சானி ஹம்சானை ஆதரித்து 20க்கும் மேற்பட்ட லோரிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
மேலும் இந்த பிரச்சாரத்தை சானி ஹம்சான் இன்று ரிஞ்சிங் செக்ஷேன் 5 இல் தொடக்கி வைத்தார்.
மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நாட்டின் 15வது பொதுத் தேர்தல் நாளை நடக்க உள்ளது இதனை தொடர்ந்து அனைத்து வாக்காளர்களும் பக்காத்தான் ஹராப்பாir ஆதரித்து வெற்றி பெற செய்வோம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில் இதுவரை தன்னை ஆதரித்து வந்த அனைத்து மக்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்தார். இதற்காக தான் நாம் அனைவரும் காத்திருந்தோம் நாட்டின் நலத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் அனைவரும் காரணம் சொல்லாமல் ஓட்டு போட மறவாதீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த வேளையில் உலு லங்காட்டில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை நான் வெற்றி பெற்ற பிறகு விரைவில் அதை சரி செய்வேன் எனவும் அவர் கூறினார்.
ஆர்.பார்த்திபன்