ஈப்போ, டிச 5- டீசல் ஏற்றியிருந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) 265வது கிலோ மீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று காலை நிகழ்ந்தது.
இவ்விபத்து தொடர்பில் இன்று காலை 7.52 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மேரு மற்றும் ஈப்போ தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தாக அவர் சொன்னார்.
டீசல் ஏற்றிய லோரி கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். தீயை அணைப்பதிலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.