ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூரில் ஹராப்பான்-பாரிசான் இடையிலான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது

கோல லங்காட், ஜூலை 2- சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் இடையிலான தொகுதி பங்கீடு நிறைவு பெற்று விட்டதாக மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பங்கீடு தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு தற்போது  ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

எங்களைப் பொறுத்த வரை எங்கள் பணியை முடித்து கட்சியின் தலைமைத்துவத்திடம் ஒப்படைத்து விட்டோம். அவர்கள் விவாதித்து இறுதி முடிவினை எடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

இது குறித்த மேல் விபரங்களை ஹராப்பான் மேல்மட்டத் தலைவர்களிடம் நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் முடிவு அவர்கள் கையில் உள்ளது என்று இங்குள்ள கமுடா கோவ் பகுதியில் நீர் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு வழி விடும் வகையில் 14வது மாநிலச் சட்டமன்றம் கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.

சிலாங்கூர்  தவிர்த்து, பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

 


Pengarang :