KUALA LUMPUR, 31 Ogos — BERSEMANGAT … Orang ramai yang hadir mengibarkan Jalur Gemilang bagi menyaksikan acara perbarisan dan perarakan sambutan Hari Kebangsaan 2022 di Dataran Merdeka pagi ini. Sambutan Hari Kebangsaan 2022 hari ini bakal disambut secara besar-besaran di Dataran Merdeka selepas dua tahun diraikan sederhana bagi mengurangkan perhimpunan ramai susulan COVID-19 dan kali terakhir ia diraikan di mercu tanda itu adalah pada 2017. –fotoBERNAMA (2022) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மாநில நிலையிலான தேசிய தினக் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஷா ஆலம், ஆக 31- நாட்டின் 66வது தேசிய தினத்தை வரவேற்கும் விதமாக நேற்றிரவு இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த கோலாகல நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டும் விதமாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 66 துறைகளின் அணிவகுப்பு, ஐ-பேட்டன் படைப்பு, வாணவெடி உள்ளிட்ட நிகழ்வுகளும் அதில் அடங்கும்.

இது தவிர, உள்நாட்டு கலைஞர்களான ஜியானா ஜைன் மற்றும் ஏவிய், இமான் திரோய் ஆகியோரின் கலைப்படைப்புகளும் இடம் பெற்றன. 

இந்நிகழ்வுகளை நேரில் காண முடியாதவர்களின் வசதிக்காக யூடியுப் சிலாங்கூர் டிவி மற்றும் மைடிவி மானா-மானா அலைவரிசைகளின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


Pengarang :