கிள்ளான், அக் 9: செந்தோசா தொகுதியில் உள்ள இந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அதன் பிரதிநிதி மாநில அரசிடம் இருந்து கூடுதல் ஜோம் ஷாப்பிங் தீபாவளி வவுச்சர்களுக்கு விண்ணப்பிக்க உள்ளார்.
இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட இந்தியர்களாக உள்ளனர் என டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.
“இதுவரை எங்களுக்கு 650 வவுச்சர்கள் கிடைத்துள்ளன, இந்த எண்ணிக்கை போதாது, ஏனெனில் இங்கு 90,000 வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 50 சதவீதம் பேர் அதாவது சுமார் 45,000 பேர் இந்திய வாக்காளர்கள் ஆவர்.
இம்முறை வவுச்சர் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்தி, பலர் பயன்பெறும் வகையில் அவர்களின் சுமை குறையும் என நம்புகிறேன்,” என்றார்.
பண்டார் புக்கிட் திங்கி அடுக்குமாடி 2 இல் துப்புரவு பணியை நடத்திய பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2023ல் ஜோம் ஷாப்பிங் வவுச்சர் திட்டத்திற்காக RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இது 82,400 பெறுநர்களுக்கு பயனளிக்கும் என டாக்டர் ஜி குணராஜ் குறிப்பிட்டார்.