காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 413 பலி

காசா, அக் 9: காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,300 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

காசாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல வீடுகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியதன் விளைவாக இறந்தவர்களில் 78 குழந்தைகள் மற்றும் 41 பெண்கள் அடங்குவர் என்று பலஸ்தீன செய்தி நிறுவனம் (WAFA) தெரிவித்துள்ளது.

தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரத்திலும், வடக்கே உள்ள பெய்ட் ஹனூன் நகரத்திலும் இஸ்ரேல் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் கைக் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களின் உயிரைப் பறித்தன.

-பெர்னாமா-வாஃபா


Pengarang :