கோலாலம்பூர், 21 டிச: 21 முதல் 27 வரையிலான காலக்கட்டத்தில் RON97 மற்றும் RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முறையே லிட்டருக்கு RM3.47, RM2.05 மற்றும் RM2.15 ஆக மாறாமல் இருந்தது.
பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில் தானியங்கி விலை பொறிமுறை (ஏபிஎம்) சூத்திரத்தைப் பயன்படுத்தி விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“உலகளாவிய எண்ணெய் விலை உயர்வில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க, அரசாங்கம் RON 95 இன் உச்சவரம்பு விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் கட்டுப்படுத்தி உள்ளது,” என்று அது கூறியது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைப் போக்கை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொடர்ந்து மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
– பெர்னாமா