ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று குற்றவாளிகள் பலி- செலாயாங்கில் சம்பவம்

கோலாலம்பூர், டிச 23- அந்நிய நாட்டினர் என சந்தேகிக்கப்படும் மூன்று
குற்றவாளிகளை போலீசார் இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர்.
இன்று விடியற்காலை 1.00 மணியளவில் நிகழந்த இச்சம்பவத்தை
கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்
அரிபின் முகமது நாசீர் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக
அவர் சொன்னார்.
இன்று பிற்பகலில் நடைபெறவிருக்கும் செய்தியாளர் சந்திப்பில் மாநில
போலீஸ் தலைவர் இந்த சம்பவம் தொடர்பான முழு விபரங்களையும்
ஊடகங்களுக்கு வழங்குவார் என்று அரிபின் தெரிவித்தார்.

Pengarang :