கோலாலம்பூர், பிப் 25- நான்கு மாநிலங்களில் மொத்தம் 12 பகுதிகளில் நேற்று தொடங்கி குறைந்து மூன்று நாட்களுக்கு தினசரி வெப்பநிலை அதிகப்பட்ச அளவாக 35 முதல் 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெர்லிஸ் மற்றும் கெடாவில் உள்ள லங்காவி தீவு, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொகோக் செனா, பெண்டாங், பாடாங் தெராப் சிக், பாலிங் மற்றும் கூலிம் ஆகியவை பாதிக்கப்படும் பகுதிகளாகும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், பேராக் மாநிலத்தின் கோல கங்சார், மற்றும் சபா மாநிலத்தின் பியூஃபோர்ட் ஆகிய இடங்களும் இதேபோல் வெப்பநிலையை எதிர்கொள்ளும்.
இவை தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.