MEDIA STATEMENTPBTSELANGOR

 மதிப்பீட்டு வரியை செலுத்துவதன் மூலம் நினைவு பரிசுகளைப் பெற வாய்ப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 1: இவ்வார இறுதியில் இரண்டாவது தவணைக்கான மதிப்பீட்டு வரி செலுத்தும் பிரச்சார காலத்தில் வரி செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) நினைவு பரிசுகளை  வழங்க  வாய்ப்பு வழங்கியுள்ளது.

பாலாய் ராயா தமேரா எஸ்எஸ் 25க்கு எதிரே உள்ள ஜாலான் எஸ்எஸ் 25/4 இல் பொதுமக்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும் கவுண்டரில் பணத்தை செலுத்தலாம் என்று எம்பிபிஜே முகநூலில் தெரிவித்தது 

இதில் மதிப்பீட்டு வரி செலுத்துவது தொடர்பான ஆலோசனை சேவைகள் மற்றும் சொத்து உரிமையாளரின் பெயர் மாற்றம் போன்ற பிற சேவைகளும் வழங்கப்படுவதாகப் பிபிடி தெரிவித்துள்ளது.

மேலும் ஏதேனும் தகவல் அல்லது விசாரணைகள் இருந்தால் எம்பிபிஜே கருவூலத் துறையை 03-7956 3544 நீட்டிப்பு 102/103/108 மற்றும் 109 இல் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :