ANTARABANGSA

மான்செஸ்டரில் பயங்கரவாத தாக்குதல் 19 பேர் பலி

லண்டன் – கலைநிகழ்ச்சியின் போது  ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் மான்செஸ்டர் நகர் அதிர்ந்த வேளையில் அச்சம்பவத்தில் சுமார் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 50 பேர் காயத்திற்குள்ளானார்கள்.

நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை போலீஸ் தீவிரவாத செயலாய் வகைப்படுத்தி அதன் விசாரணையை முடக்கியுள்ளது.கலைநிகழ்ச்சியின் போது குண்டு வெடித்ததாகவும் அஃது பயங்க ஒலியுடன் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார்.

குண்டு வெடிப்பின் போது அமெரிக்க பாடகர் அரியேனா மேடையில் பாடிக்கொண்டிருந்தார்.இருப்பினும் அவர் பாதுக்காப்புடன் அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழலில் 19 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முழுமையான எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் போலீஸ் தரப்பு கூறியது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிந்து விட்ட நிலையில் மேலும் பாதுக்காப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

DAeMiYOW0AANlbS


Pengarang :