கோலா லம்பூர், செப்டம்பர் 3:
நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்த மழையினால் கோலா லம்பூரின் ஜாலான் கூச்சிங்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கோலா லம்பூரின் தீயணைப்பு படையின் நடவடிக்கை மையத்தின் தலைவர், ஜாமானி இஸ்மாயில் கூறுகையில் மாலை மணி 6.45 வாக்கில் வெள்ளம் குறையத் தொடங்கியது.
” மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெய்த கனத்த மழை பெய்தது. இதனால் பத்து ஆற்றின் நீர் கரை புரண்டு ஓடி ஜாலான் கூச்சிங்கை மூழ்கடித்தது. ஆனாலும், சுமார் 15 நிமிடங்களில் வெள்ளம் வற்றத் தொடங்கியது. மேலும் சாலைகள் மூடப்படவில்லை,” என்று ஹாரியான் மெட்ரோவிற்கு கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
#கேஜிஎஸ்