PBTSELANGOR

எம்பிஏஜே 25வது ஆண்டு நிறைவு விழா

அம்பாங் – அம்பாங் மாநகர மன்றம் அதன் 25வது ஆண்டு நிறைவினை எட்டியுள்ள நிலையில் சீரான மக்கள் சேவையோடு தொடர்ந்து புதுமையான விவேகமான மற்றும் ஆற்றல் மிக்க சேவையினை வழங்கி வரும் எம்பிஏஜெ அதன் தொடர்ந்து மேம்படுத்துவதிலும் சிறந்த இலக்கை நோக்கி கொண்டு செல்லவும் தனித்துவ கவனம் செலுத்தி வருவதாக அதன் தலைவர் அப்துல் ஹமிட் உசேன் தெரிவித்தார்.

மேலும்,மாநில அரசாங்கத்தின் இலக்கையும் அதன் கொள்கையையும் சிறந்த நிலைக்கு உயர்த்துவதும் அதனை முறையாக மக்களிடையே கொண்டு செல்வதிலும் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அதேவேளையில்,எம்பிஏஜெ பணியாளர்களும் அதற்கு ஒப்ப தங்களின் கடமையினை செம்மையாகவும் நேர்த்தியாகவும் மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர் எம்பிஏஜெ தனித்துவமான மாநகர மன்றமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,நமது பண்பாடு,நாகரிகம் மற்றும் வாழ்வியல் சூழலிலும் தனித்துவ கவனமும் அக்கறையும் கொண்டிருக்கும் எம்பிஏஜெ அதனை உள்நாடு மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் கொண்டு சேர்ப்பதில் விவேகமாய் செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும்,எம்பிஏஜெ பணியாளர்களும்  ஆக்கப்பூர்வமாகவும் சீராகவும் தங்களின் பணியினை மேற்கொள்வதில் விவேகமாய் செயல்படுவதாகவும் கூறிய அவர் அநாவசிய தவறான கருத்துரைகளும்  இல்லாதிருப்பதும் பெரும் இலக்காக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,லஞ்சம் உட்பட பதவியை தவறாக பயன்படுத்துதல் உட்பட எந்தவொரு துஷ்பிரோகங்களிலும் எம்பிஏஜெ பணியாளர்கள் ஈடுப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் வேளையில் அதனை இலக்காகவே கொண்டு செயல்படுவதாகவும் கூறினார்.

எம்பிஏஜெவின் சிறந்த பணியாளர் விருது வழங்கும் நிகழ்வில் அவர் இதனை வலியுறுத்தினார்,இந்நிகழ்வில் அதன் 65 பணியாளர்களுக்கு அவர்களின் சிறந்த சேவையினை பாராட்டி விருது வழங்கியதோடு ஒவ்வொருவருக்கும் தலா வெ.1000 வெகுமதியும் வழங்கப்பட்டது.

 

 


Pengarang :