டமன்சாரா, 23 ஏப்ரல்:
“சிலாங்கூர் மாநில பொருட்கள் ” திட்டம் சிலாங்கூரில் தயாரிக்கும் பொருட்கள் தர ரீதியிலும் பிரபலமான பொருட்களாகவும் கொண்டு வருவதில் தேசிய அளவில் மற்றும் அனைத்துலக ரீதியிலும் முயற்சிகள் ஈடேறும்.
சிலாங்கூர் ஹிஜ்ராவின் தலைமை செயல் அதிகாரி டத்தோ மன்சோர் ஒத்மான் கூறுகையில், ஹிஜ்ரா தொடர்ந்து பல திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் கொண்டு சொந்த தயாரிப்புகளை ஊக்குவிக்கும்.
” இத்திட்டம் தொழில் முனைவர்களுக்கு பொருட்களை சந்தைப்படுத்துவதிற்கும் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளை பிரபலமான பொருட்களின் இடம் பெறவும் வழி வகுக்கும். ”
” சிலாங்கூர் மாநில இளவரசரின் உதவியோடும் இளம் தொழில் முனைவர்களை மேம்படுத்தவும் முடியும் என்று நம்புகிறேன்.”
இந்த நிகழ்ச்சி தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழுவின் ஒத்துழைப்போடு மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில இளவரசர் தெங்கு அமிர் ஷா அவர்கள் அதிகாரப்பூர்வ திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சி, 19 ஏப்ரல் தேதி முதல் 23 ஏப்ரல் தேதி வரையில் ஓன் உத்தாமாவிலும் பின்பு 25 ஏப்ரல் தேதி முதல் 1 மே வரையில் ஷா ஆலம் ஏயிஓனிலும் நடைபெறும்
@கெஜிஎஸ்