SELANGOR

டத்தோ இஸ்கண்டரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலோங்க வேண்டும்
பல்லினம் வாழும் மலேசிய நாட்டில் நாம் அனைவரும் ஒவ்வொருவரின் மத நம்பிக்கையையும் அவர்களின் பண்பாடுகளையும் சமய நம்பிக்கைகளையும் மதித்தல் என்பது நாட்டின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் வழிகோலும்.அவ்வகையில் இந்துக்கள் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை நாம் அனைவரும் ஒற்றுமையோடும் புரிந்துணர்வோடும் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும்.

நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் ஒரு இனத்தை சார்ந்து இருந்தாலும் அஃது மலேசியாவின் பண்டிகையாக நாம் கருதி மகிழ்ச்சியாகவும் இன்பம் சூழ்ந்தும் கொண்டாடிட அனைத்து இந்துக்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.

டத்தோ இஸ்கண்டார் பின் அப்துல் சமாட்
செம்பாக்கா சட்டமன்ற உறுப்பினர், வீடமைப்பு,கட்டிட நிர்வாகம் மற்றும் நகர்புற நல்வாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர்


Pengarang :