SELANGORUncategorized @ta

அன்வாருடன் வரவு செலவு திட்டத்தை தயாரித்த அனுபவம் தற்போது பெரிதும் துணை புரிந்தது

ஷா ஆலம், நவம்பர் 23:

முன்னாள் நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கீழ் பணியாற்றிய அனுபவம் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சிலாங்கூரின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க பெரிதும் உதவியாக இருந்தது என்று அஸ்மின் அலி கூறினார். கடந்த நவம்பர் 3 தாாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தை கண்டு அன்வார் பெருமிதத்துடன் ஆதரவு தெரிவித்தார் என்று விவரித்தார்.

”   கோலா லம்பூர் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்வாரை  இரண்டு மணி 45 நிமிடம் சந்தித்து உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிறைச்சாலையில் இருந்தாலும் அதன் அதிகாரிகள், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் சிலாங்கூர் வரவு செலவு திட்டத்தை கண்டு பெரிதும் கவர்ந்ததாக தம்மிடம் தெரிவித்தார்,” என்று சிலாங்கூர் வரவு செலவுத் திட்ட விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :