ஷா ஆலம், பிப்ரவரி 17:
உலு லங்காட் மாவட்டத்தில் தாமான் பிங்கீரான் டெலிமா ஏரியின் தூய்மைக்கேட்டிற்கு மூல காரணமாக இருந்த சட்ட விரோத குப்பை வீசும் இட உரிமையாளர் மீது காஜாங் நகராண்மை கழகம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் தலைவர் முகமட் சாயூத்தி ஓமார் கூறினார். இந்த நடவடிக்கை மூலம் காஜாங் நகராண்மை கழகம் உடனடியாக தூய்மைப்படுத்தும் பணி தொடர உதவும் என்று தெரிவித்தார் .
” சட்ட விரோத குப்பை வீசும் இடத்தில் இருந்து ஏரிக்கு கழிவுகள் சென்று நீரை மாசுபடுத்தி உள்ளது. அதே, வேளையில் குத்தகையாளர்கள் தூய்மைப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிரடி நடவடிக்கையில் காஜாங் நகராண்மை கழகம் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார் .