SELANGOR

தாமான் ஆயர் மானிஸ் வீடமைப்புத் திட்டம்: மேம்பாடு குறித்து அறிய மக்கள் ஆவல்

ஷா ஆலம், மே 7-

பஞ்சாங் பெடெனா தாமான் ஆயர் மானிஸ் வீடமைப்புத் திட்டத்தின் நடப்பு நிலவரம் குறித்து அறிய சபாக் பெர்ணம் மக்கள் ஆவலாய் காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மலிவு வீடமைப்புத் திட்டத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை இப்பகுதி மக்கள் கேட்டு வருகின்றனர் என்று சபாக் பெர்ணம் சட்டமன்ற உறுப்பினர் அகமது முஸ்தாயின் ஒஸ்மான் கூறினார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள விலை தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தாம் இவ்விவகாரம் தொடர்பான சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்கபதாக புகார்தாரருமான முகமது தெரிவித்தார்.

“சபாக் பெர்ணம் மக்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தியுடன் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளேன்” என்றார் அவர்.
இந்த வீடமைப்புத் திட்டத்தின் வீடுகளை 150,00 வெள்ளி முதல் 250,000 வெள்ளி என்ற விலையில் வாங்குவதற்கு இப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :