NATIONAL

இனரீதியான பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம்- அன்வார்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 20:

நமது நாட்டின் பொது மக்கள் அமைதி மற்றும் சுபிட்சத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இனரீதியான பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  வலியுறுத்தினார். பாக்காத்தான் ஹாராப்பான் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் இனங்களிடையே நல்லிணக்கத்தை பேணிக் காத்து வருவதாக அன்வார் இப்ராஹிம் கூறினார்.

” இனத்துவாத சித்தாந்தம் நமக்கு தேவையில்லை. நாட்டின் அமைதி மற்றும் சுபிட்சம் எல்லா பிரஜைகளின் பொறுப்பு ஆகும்,” என்று கோலா லம்பூரில் நடைபெற்ற தலைவரின் பிரசாரம் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இவ்வாறு அன்வார் பேசினார்.


Pengarang :