Dato’ Menteri Besar Selangor, Amirudin Shari melakukan upacara perasmian memasang Bidal air ke paip pada Majlis Pelancaran Menjadi Wira Penjimat Air di Padang Awam Taman Batu Caves, Selayang.15 Oktober 2019. Foto REMYARIFIN/SELANGORKIN.
SELANGOR

புதிய தண்ணீர் கட்டணம் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்

பத்து கேவ்ஸ், அக்.15-

புதிய தண்ணீர் கட்டணம் குறித்து பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“ இன்னும் முடிவு செய்யப்படவில்லை, காலம் கணிந்தவுடன் இது குறித்து அறிவிக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றார் அவர்.
“இவ்விவகாரம் குறித்து முதலில் மத்திய அரசு நன்கு ஆராய வேண்டும். இந்த புதிய கட்டணம் ஏக காலத்தில் அமல்படுத்தப்படுவது சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் அவர் சொன்னார்.

எனினும், தண்ணீர் என்பது மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரமாகும். எனவே பொருத்தமான காலத்தில் அது அமல்படுத்துவது அவசியமாகும் என்றார்.


Pengarang :