NATIONAL

2017ஆம் ஆண்டு தொடங்கி மரணமடைந்த 389,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், நவ.13-

2017 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆகஸ்டு 31 வரையில் மரணமடைந்த 388,098 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பொதுத் தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) நீக்கியுள்ளது.
இந்த எண்ணிக்கையில் இவ்வாண்டு ஜனவரி தொடன்கி ஆகஸ்டு 31ஆம் தேதி வரையில் மரணமடைந்த 91,154 பேர்களின் பெயர்களும் அடங்கும் எஞ்று பிரதமர் துறை துணை அமைச்சர் முகமது ஹனிபா மைடின் கூறினார்.

2017ஆம் ஆண்டு மொத்தம் 179,118 பெயர்களும் 2018ஆம் ஆண்டு மொத்தம் 117,826 பெயர்களும் நீக்கப்பட்டதாக மக்களவையில் வாழ்ய் மொழியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் துணையமைச்சர் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையாக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிய கோத்தா மலாக்கா நாடாலுமன்ற உறுப்பினர் க்கூ போய் தியோங் கேட்ட கேள்விக்கு துணையமைச்சர் மேற்கண்ட விவரங்களை வெளியிட்டார்.


Pengarang :