ஷா ஆலம், ஜன.21-
மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் சிலாங்கூர் ஸ்மார்ட் வை ஃபை திட்டத்தின் வழி இலவச இணைய பிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“2015ஆம் ஆண்டு இத்திட்டம் வழி அகன்ற அலை வரிசை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் பல்வேறு தரப்பினர் பயன் அடைந்துள்ளனர்” என்றார் அவர்.
“பெரும்பாலான பொது கட்டடங்க உயர்க்கல்வு கூடங்கல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடமைப்பு பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக” அவர் சொன்னார். அதே வேளையில், பயனீட்டாளர்கள் இந்த தொழில்நுட்ப வசதியை விவேகமாகவும் நல்ல முறையிலும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
எனினும், இணையத்தை வலம் வருவதற்கு வழங்கப்படும் சுதந்திரத்தை வேலையில் கவனத்தை குறைப்பதற்கான ஒரு காரணமாகக் கூறக் கூடாது என்று அவர் நினைவுறுத்தினார்.