Foto Sumber: BERNAMA
RENCANA PILIHANSELANGOR

பிரத்தியேக மின் ரொக்க செயலி மேம்படுத்தப்படும்!

கிள்ளான், ஜன.20-

விவேக சிலாங்கூர் அமலாக்க வடிவமைப்பில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தும் விவகாரங்களில் ஒன்றாக மின் ரொக்க பயனீடு அமைந்துள்ளது என்றார் முதலீடு, தொழில்துறை மற்றும் வர்த்தம், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
இலக்கவியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் ரொக்க பயன்பாடற்ற சமூகத்திற்கு மாறவும் இது மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

மாநிலத்திற்கென சொந்தமாக ஒரு மின் ரொக்க செயலியை மேம்படுத்துவது குறித்து மாநில அரசு ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆயினும், இது குறித்து தொடக்கக் கட்டமாக புற நகர் மக்கள், மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த கல்வி கற்றவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுவதோடு பயன்படுத்தும் வழி வகைகளைப் போதிப்பது அவசியமாகும் என்று இங்குள்ள தாமான் எங் ஆன் டேவானில் நடைபெற்ற 2020 மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தெங் கூறினார்.

மின் ரொக்கம் பயனீட்டால் பல்வேறு நன்மைகள் குறிப்பாக பாதுகாப்பு, தூய்மை மற்றும் பரிவர்த்தனை குறித்து பதிவுகள் போன்ற நன்மைகள் உள்ளன என்று அவர் விவரித்தார்.


Pengarang :