PBTRENCANA PILIHANSELANGOR

மாநகரமாகப் பிரகடனப் படுத்தப்பட்டதும் சுபாங் ஜெயா சேவை தரம் தொடர்ந்து பேணப்படும்

ஷா ஆலம், ஜன.3-

விரைவில் மாநகரமாக பிரகடனப் படுத்தப்படவிருக்கும் வேளையில் தங்களின் சேவை தரத்தை பேணும்படி சுபாங் ஜெயா நகாரண்மைக் கழ்க பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். உலகின் தலைசிறந்த மாநிகர தரத்திற்கு ஏர்ப ஊராட்சி மன்ற தரப்பினரின் நடைமுறைகள் இருப்பது அவசியம் என்று அதன் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

“நீண்ட காலமாகவே மாநகரமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் தற்போது ஈடேறியுள்ளது. அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைப்பதற்கு காரணமான மன்றத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி” என்றார் அவர்.  மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷா அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்த விருக்கும் இந்நகரை மேலும் மேம்படுத்த மன்று உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், பிறந்திருக்கும் 2020ஆம் ஆண்டில் மன்ற பணியாளர்கள் மேலும் புத்தாக்கத்துடன் நேர்மையாகவும் தங்கள் பணிகளை ஆற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :