PBTSELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த வாரமே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு விட்டது !!!

ஷா ஆலம், மார்ச் 29:

கடந்த வாரம் தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் கட்டம் கட்டமாக கோவிட்-19 தொடர்பில் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கப்பட்டதாக மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களே செய்தன என்று அவர் விவரித்தார். ஆனாலும், இந்த வாரம் தொடங்கி கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை மேலும் துரிதப்படுத்தப்படும் என்றார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஓரிரு ஊராட்சி மன்றங்களை மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்து ஊராட்சி மன்றங்களும் தங்களது கடமையை சரியான முறையில் செய்ய வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார். நேற்று பாதுகாப்பு பிரிவின் மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஊராட்சி மன்றங்களை கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கப்பட வேண்டும் என்ற கூற்றை மேற்கொள் காட்டி ஸீ ஹான் இவ்வாறு பேசினார்.


Pengarang :