Lawatan Dato’ Seri Amirudin Shari ke ruang pameran selepas merasmikan bangunan PJ Smart Centre (PJSC) dan Demonstrasi 5G Celcom berlangsung di Perkarangan Ibu Pejabat Majlis Bandaraya Petaling Jaya (MBPJ), Petaling Jaya pada 10 Mac 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
PBTRENCANA PILIHANSELANGOR

விவேக மாநகர அந்தஸ்தை எம்பிபிஜே நிச்சயம் அடையும்!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 11-

2025ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக உருமாற்றும் தூர நோக்க திட்டம் நிறைவேறுவதற்கு ஊராட்சி மன்ற தரப்பு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்திற்கு (எம்பிபிஜே) ஒத்துழைப்பு நல்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார். நாட்டில் முதலாவதாக நிர்மாணிக்கப்பட்ட ஊராட்சி மன்ற விவேக மையமாக பெட்டாலிங் ஜெயா விவேக மையக் கட்டுமானம் திகழ்வதை அவர் மேற்கொள் காட்டினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படத் தொடங்கிய இம்மையமானது வெளிநாட்டு நிறுவனங்களும் முன்னுதாரணமாக குறிப்பிடும் மையம் என்பது பெருமையளிப்பதாக அமிருடின் கூறினார்.
“எம்பிபிஜேவின் இந்த அடைவு நிலை பாராட்டுக்குரியது. இந்த மையல் கட்டுமானம் மூலம் நாட்டின் முதலாவது விவேக மாநகரம் என்ற தகுதியை எம்பிபிஜே பெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.


Pengarang :