கோலாலம்பூர்,மே20:
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் லஞ்சம் – ஊழல் ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு நேரடியாக வரவேண்டும் என அதன் துணை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பஃகி தெரிவித்தார்.
இதற்கு முன்னர் நஜிப்பின் வீட்டிற்கு எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் வருவார்கள் என நஜிப்பின் வழக்கறிஞர் டத்தோ ஹர்பால் சிங் கூறியிருந்ததை அவர் மறுத்தார்.
நஜிப் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வரும் செவ்வாய்கிழமை நஜிப் துன் ரசாக் புத்ராஜெயாவிலுள்ள எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என அவர் மேலும் கூறினார்.
நஜிப்பிடம் எஸ்.ஆர்.சி எனப்படும் 1எம்டிபியின் துணை நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இதற்கு முன்னதாக நாட்டின் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ முகமட் அப்பெண்டி அலி கடந்த 26 ஜனவரி 2016இல் நஜிப் 2.6பில்லியன் விவகாரத்தில் குற்றம் இழைக்கவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.