ஷா ஆலம், ஜூன் 10:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2008-இல் தொடங்கிய பரிவு மிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநில பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு மற்றும் பரிவுமிக்க அரசாங்கம் ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் கூறினார். ஜபிஆர் திட்டங்களை மேலும் திறன்மிக்க முறையில் செயல்படுத்தி மக்களுக்கு நன்மைகள் கொண்டு வரும் என்றார்.
மாநில அரசாங்கம் மக்களின் மேம்பாட்டிற்காக வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை கணபதி ராவ் சுட்டிக் காட்டினார்.
” இளையோர்கள் கல்வியை தொடர நாம் பல்வேறு நன்முயற்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளது பெருமை கொள்கிறோம். 2008 தொடங்கி 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இலவச கல்வியை பெற்று வருகின்றனர்,” என்று சீனார் ஹாரியான் அகப்பக்கத்தில் நேரடி ஒளிபரப்பில் இவ்வாறு பேசினார்.