பாங்கி, ஜூலை 15:
தலைவர் பதவிக்கு போட்டியிடவிருக்கும் கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் மத்திய உச்ச மன்ற உறுப்பினர் அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அமிரூடின் கடந்த 2013-இல் இருந்து அன்வார் இப்ராஹிம் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்ததை நினைவு கூர்ந்தார்.
” தற்போதைய கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் அவர்களின் அர்ப்பணிப்பும் மிகவும் நேர்த்தியானது. அடுத்து மலேசிய நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கும் அன்வார் கட்சியின் தலைவர் பதவிக்கு தகுதியானவர்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.