ஷா ஆலம், ஏப்.23-
தீபகற்ப மலேசியாவில் கெடா, கிளந்தான், பகாங் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வெப்ப நிலை ஏற்படும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் நேற்று தொடங்கி 35 முதல் 37 செல்சியஸ் டிகிரி அளவில் உஷ்ன நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது..
கடந்த 3 நாட்களாக இந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான வட்டாரங்களில் இந்த சூழல் நிலவுவதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி துறை கூறியது.
கெடாவில், பாசிங், கோலமூடா, சிக், பெண்டாங், கோதா செதார் மற்றும் குபாங் பாசு ஆகிய பகுதிகளில் கடும் வெப்பம் ஏற்பட்டுள்ளது.
கிளாந்தானில் பாசீர் மாஸ், தானா மேரா, ஜெல்லி, கோல கிராய், குவா மூசாங் மற்றும் மாசாங் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.