SELANGOR

தெங்கு இஸ்மாயிலின் மறைவுக்கு மந்திரி பெசார் அனுதாபம்

ஷா ஆலாம், ஜூலை 9:

தெங்கு பெசார் புத்ரா சிலாங்கூர் தெங்கு இஸ்மாயில்ஷா சுல்தான் ஹிஷாமுடின் அலாம் ஷாவின் மறைவுக்கு மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
மந்திரி பெசார் முகநூல் வழியாக தனது அனுதாபத்தைப் பதிவு செய்தார்.

“தெங்கு பெசார் புத்ரா சிலாங்கூர் தெங்கு இஸ்மாயில்ஷா அல்மார்ஹூம் சுல்தான் ஹிஷாமுடின் அலாம் ஷாவின் மறைவையொட்டி அரச குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அமிருடின். ஆ
சிலாங்கூரின் 7ஆவது சுல்தான் ஹிஷாமுடின் அலாம் ஷாவின் புதல்வரான தெங்கு இஸ்மாயில் ஷா 1935 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி பிறந்தார். இவர் சுல்தான் சலாஹூடின் அப்துல் அஜிஸ் ஷாவின் இளம் சகோதரர் ஆவார்.
84 வயதான தெங்கு இஸ்மாயில் ஷா முதுமை காரணமாக திங்கட்கிழமை இரவு காலமானார்.


Pengarang :