ketika menyampaikan ucaptama Persidangan Pentadbiran ICT Universiti 2019 di Hotel Marriot, Putrajaya.
NATIONALSELANGOR

மந்திரி பெசார்: 20 ஆண்டுகளுக்கு பின் என் மீது மக்கள் ஆத்திரம் அடையக் கூடாது !!!

ஷா ஆலம் , ஆகஸ்ட் 28:

சிலாங்கூர் மாநிலம் பல்வேறு திட்டங்களை அல்லது ‘மிட்டாய்களை’ மக்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் மக்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற முடியும் ஆனால் இதன் பாதிப்பு மந்திரி பெசார் மற்றும் மாநில நிர்வாகம் மக்களிடம் பிரபலமான அரசாங்கம் என்ற பெயர் மட்டுமே எடுக்க முடியும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி நினைவு படுத்தினார்.

” மக்களுக்கு பணம் கொடுத்து நான் பிரபலமாக ஆக முடியும், ஆனால் எதிர் காலத்தில் மாநில வருமானம் பாதிக்கப்படும். ஆகவே, நான் இன்று பிரபலம் அடைந்து, 20 ஆண்டுகளுக்கு பின் மாநில வளம் மோசமான நிலையில் உள்ளது என்ற அவல நிலை ஏற்பட்டு என்னை குறை சொல்ல கூடாது,” என்று அஜென்டா அவானியில் இடம்பெற்ற அபரீத வளர்ச்சியான சிலாங்கூர் மாநிலம் என்ற நேரலை நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.


Pengarang :