பெட்டாலிங் ஜெயா, ஜன.9-
மக்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதிலும் விதிக்கப்படும் டோல் கட்டணங்களை இவ்வாண்டு உயர்த்துவதில் என்ற முடிவில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“இந்த நெடுஞ்சாலைகளைப் பரமாரிப்பதற்கான இழப்பீடாக 1 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றாலும் மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் இதைக் கருதுகிறது” என்றார் அவர்.
“டோல் கட்டண அதிகரிப்பை அரசாங்கம் நிறுத்தி வைத்தாலும், அரசாங்கம் அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார். இது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. மாறாக, டோல் கட்டணம் அதிகரிக்கும் இந்தத் தொகையும் அதிகரிக்கும் என்று கிளானா ஜெயாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குவான் எங் தெரிவித்தார்.
பக்காத்தான் அரசாங்கம் எடுத்துள்ள இம்முடிவின் காரணமாக , மக்கள் தொடர்ந்து நடப்பு கட்டணங்களையே தொடர்ந்து செலுத்தலாம் என்று அவர் விவரித்தார்.