ஷா ஆலம், பிப்.6-
இந்தோனேசியா, ஜாக்கர்த்தாவின் இன்று தொடங்கிய மலேசிய சுகாதாரப் பராமரிப்பு கண்காட்சி (எம் எச் எக்ஸ்) 2020, தெற்கிழக்காசியாவின் சுகாதாரச் சுற்றுலா தளம் என்ற சிலாங்கூரின் முத்திரையை உயர்த்துவதற்கான ஒரு தடமாக அமைந்தது.
மாநிலம் அமைந்துள்ள பகுதி, இரு வழி தொடர்பு வசதி, கலாச்சாரம் மற்றும் நாணய பரிவர்த்தனை மதிப்பு போன்றவை சிலாங்கூர் சுகாதார சுற்றுலா துறை விரிவாக்கம் காண்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று சிலாங்கூர் சுற்றுலா வாரியத் தலைமை நிர்வாகி அஸ்ருல் ஷா முகமது கூறினார்.
“மாநிலத்திற்கு சுகாதார சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளில் இந்தோனேசிய சுற்றுப் பயணிகள் முதலிடம் வகிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெட்டாலிங் வட்டாரத்திற்கு அதிகளவு வருகை புரிகின்றனர்” என்றார் அவர்.
கடந்தாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 142,000 இந்தோனேசிய சுற்றுப் பயணிகள் மாநிலத்திற்கு வருகை புரிந்தனர்.
சிலாங்கூரில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 135,000 ஆக இருந்தது என்றும் 2018இல் அது 240,000 ஆக உயர்ந்தது என்றும் அவர் கூறினார். இந்த எண்ணிக்கையானது, ஒவ்வோர் ஆண்டும் சராசரி 13 விழுக்காடு அதிகரித்து வருவதை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.