ஷா ஆலம், மார்ச் 24-
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு விளையாட்டாளரும் மேற்கொள்ளும் பயிற்சியை சிலாங்கூர் குழு வீடியோ மூலம் கண்காணித்து வருகிறது.
“முன்பு போல் விளையாட்டாளர்கள் வெளிப்புறப் பயிற்சியில் ஈடுபட முடியாவிட்டாலும் அனைவரும் சுறுசுறுப்புடன் இருப்பதை உறுதி செய்ய இந்த வீட்டு வேலையை அவர்கள் நிறைவு செய்ய வேண்டும்” என்று பயிற்சியாளர் பி.சத்தியநாதன் கூறினார்.
விளையாட்டாளர்கள் அன்றாடம் பாரங்களைப் பூர்த்தி செய்ய அனுப்ப வேண்டும். அவர்கள் யோ யோ சோதனை மற்றும் உடல் எடை மூலம் கண்காணிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.
விளையாட்டாளர்களின் ஆற்றல் யோ யொ மூலம் சோதிக்கப்படுகிறது என்று அவர் விவரித்தார். விளையாட்டாளர் மீண்டும் களத்திற்குத் திரும்பும் வரை செய்ய வேண்டிய பயிற்சிகளை இந்த மறுசீரமைப்புத் திட்டம் கொண்டுள்ளது என்றார் அவர்.