ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ரவாங் செல்கேட் மருத்துவமனை அடுத்தாண்டு மார்ச் மாதம் பூர்த்தியாகும்

ஷா ஆலம், ஏப் 20- ரவாங்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் செல்கேட் மருத்துவமனை அடுத்தாண்டு மார்ச் மாதம் பூர்த்தியாகும். என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் தற்போது 90 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

அந்த மருத்துவமனை கட்டிடத்தை எட்டு மாடியிலிருந்து பத்து மாடிகளாக உயர்த்துவதற்கு ஏதுவாக 4 கோடி வெள்ளியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்த மருத்துவனையில் கட்டில்களின் எண்ணிக்கை 95லிருந்து 230 ஆக உயர்த்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த மருத்துவமனை பூர்த்தியானவுடன் 100 மருத்துவர்கள் உள்பட 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.

இந்த மருத்துவமனை பூர்த்தியானவுடன் இங்கு விதிக்கப்படும் கட்டணம் இதர தனியார் மருத்துவமனைகளை விட 20 முதல் 25 விழுக்காடு வரை குறைவாக இருக்கும் என செல்கேட் அதிகாரிகள் தெரிவித்ததாக சுவா கூறினார்.


Pengarang :