ECONOMYHEALTHPBTYB ACTIVITIES

மூத்த குடிமக்கள் தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்க புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் கிராமங்களுக்கு பயணம்

ஷா ஆலம், ஜூன் 17- கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக புக்கிட் மெலாவத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா ஜூல்கிப்ளி இவ்வாரம் தொடங்கி தொகுதியிலுள்ள கிராமங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

விவேக கைப்பேசி போன்ற நவீன தொடர்பு உபகரணங்கள் இல்லாதது மற்றும் தடுப்பூசி திட்டம் பற்றி அறிந்திராதது போன்ற காரணங்களால் தடுப்புசித் திட்டத்தில்  இன்னும் பதியாமல் இருக்கும் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு இந்த இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

தடுப்பூசி பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட அட்டையை நாங்கள் அவர்களிடம் வழங்குவோம். குறிப்பிட்ட தேதியில் சம்பந்தப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு வருவதை கிராமத் தலைவர்கள் மூலம் உறுதி செய்வோம் என்றார் அவர்.

இந்த பயணத்தின் போது தடுப்பூசி மையங்களுக்குச் செல்வதற்கு வாகன வசதி இல்லாதவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றார் அவர்.

தடுப்பூசி பதிவு இயக்கத்தை மேலும் தீவிரமாக மேற்கொள்வதற்காக டீம் சிலாங்கூர் உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளின் உதவி நாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :