ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

மெலாவத்தி அரங்கில் நெரிசலைத் தவிர்க்க மாவட்ட சி.ஏ.சி. மையங்களுக்குச் செல்லுங்கள்- நோயாளிகளுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், ஜூலை 7- சி.ஏ.சி. எனப்படும் கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களுக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகள், தொடர் சிகிச்சைக்காக அருகிலுள்ள சி.ஏ.சி. மையங்களுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நோயாளிகளை மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 34 சி.ஏ.சி. மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ  டாக்டர்  ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.

நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள சி.ஏ.சி. மையங்களுக்குச் செல்லுங்கள். ஷா ஆலம், மெலாவத்தி அரங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்டதை போன்ற நெரிசல் மீண்டும் ஏற்படுவதை இதன் வழி தடுக்க முடியும் என்றார் அவர்.

விசாலமான கார் நிறுத்துமிட வசதி காரணமாக பெரும்பாலோர் மெலவாத்தி அரங்கிலுள்ள சி.ஏ.சி. மையத்தை தேர்ந்தெடுக்கின்றனர். எனினும், இங்கு நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அவர்கள் தங்கள் வட்டாரங்களில் உள்ள சி.ஏ.சி. மையங்களுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன் என அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :