ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பொது மக்கள் மத்தியில் தொற்று மையங்கள் அதிகரிப்பு- டான்ஸ்ரீ  நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், ஜூலை 24- நாட்டில் நேற்று 30 புதிய தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. இதன் வழி வேலையிட தொற்று மையங்ளைக் காட்டிலும்  சமூக தொற்று மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.

அந்த முப்பது தொற்று மையங்களில் 16 சமூகத்தில் பரவியவை என்றும் மேலும் எட்டு வேலையிடங்களை மையமாக கொண்டிருந்ததாகவும் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இது தவிர நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட நான்கு தொற்று மையங்கள், ஒரு சமய தொற்று மையம் மற்றும் ஒரு உயர்கல்விக் கூட தொற்று மையம் ஆகியவை நேற்று அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.

கிளந்தானில் மிக அதிகமாக அதாவது ஆறு சமூக தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :