ஷா ஆலம், ஆக 16– பிரதமர் பதவியை அதிகாரப்பூர்வமாக துறந்துள்ள டான்ஸ்ரீ மொகிடின் யாசின், நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் தடுப்பூசித் திட்டம் இடையூறின்றி மேற்கொள்ளப்படுவதற்கும் ஏதுவாக புதிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்ட அவர், அடுத்த இரு மாதங்கள் நாட்டிற்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும் என்றார்.
தேசிய மீட்சித் திட்டத்தில் வகுக்கப்பட்ட இலக்கின்படி வரும் அக்டோபர் மாத த்திற்குள் மலேசியா நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் ன எதிபார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
நாட்டில் பொருளாதாரம் விரைந்து மீட்சியுறுவதற்கு ஏதுவாக அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் திறக்கப்பட வேண்டும். இதன் வழி மக்கள் வருமானத்தை ஈட்டி தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பராமரிக்க இயலும் என்றார் அவர்.