பினாங்கு, புக்கிட் தெங்கா, அக்டோபர் 17;-பினாங்கு, புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு கூய் சியூவ் லுங், நேற்று முன்தினம் இரவு புக்கிட் தெங்கா ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அந்த விழாவில் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரிய தலைவர் டத்தோ M. ராமச்சந்திரனுடன் கலந்து கொண்ட மாண்புமிகு கூய் சியூவ் லுங், மேற்படி ஆலயத்தின் திருப்பணிக்கு வெள்ளி 30,000 ஆயிரம் வழங்க வாக்களித்தார். அதன் முதல் பகுதியாக வெள்ளி 10,000க்கான காசோலையை ஆலய நிர்வாகத்திடம் வழங்கினார். ஆலய நிர்வாகம் அந்த நன்கொடைக்கு தங்கள் நன்றியை சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
|
|
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/10/gooi-Bkt.-tengh-960x719.jpg)