ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

27 லட்சம் இளையோர், 2.27 கோடி பெரியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 5- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.4 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 20 ஆயிரத்து 504 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 89.9 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 29 ஆயிரத்து 902 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர். நேற்றிரவு 11.59 வரை இந்த எண்ணிக்கை பதிவானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

பெரியவர்களில் 97 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 18 ஆயிரத்து 376 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 98.4 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரத்து 859 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று 67,701 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 3,902 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் 3,209 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 60,590 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 40 லட்சத்து 31 ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது. ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 5 ஆயிரத்து 809 ஆகும்.


Pengarang :